இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி கடந்த ஏப்ரல் மாதம்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி கடந்த ஏப்ரல் மாதம்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றுமுறை கட்சியின் பொதுச்செயலாளரான இருந்த  சுதாகர் ரெட்டி, உடல் நிலை காரணமாக, தனது பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக அறிவித்ததோடு, பொதுச்செயலாளர் பதவிக்கு  து.ராஜாவின் பெயரை பரிந்துரைத்தார். 

sudhakar

இந்நிலையில் டெல்லியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் கூட்டம்  நடந்தது. அதில் புதிய பொதுச்செயலராக யாரைத் தேர்வு செய்யலாம் என்ற ரீதியில் ஆலோசிக்கப்பட்டது. அதில்  கேரளாவைச் சேர்ந்த பினோய் விஸ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் ஜித் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

raja

இறுதியில்  து.ராஜாவை, அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு,  இன்று டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 அகில இந்திய பொதுச்செயலாளராகப் பதவியேற்கவுள்ளது. ராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.