இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி: முதல் பேட்டிங் யார் தெரியுமா?

 

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி: முதல் பேட்டிங் யார் தெரியுமா?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 3-வது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த 2–வது ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது. மும்பையில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஒரு நாள் தொடரின் 5-வது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. 


இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியுள்ளது.