இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு எவ்வளவு தைரியம்? – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

 

இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு எவ்வளவு தைரியம்? – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை சில குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

shashi tharoor

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், “எனது 10 வருட அனுபவத்தில், ஒரு அரசின் தலைமை மற்றொரு நாட்டின் அரசை இப்படி வெளிப்படையாக மிரட்டுவதை நான் கேள்விப்பட்டதுக்கூட இல்லை. இந்தியாவுக்கு சொந்தமான ஹைட்ராக்ஸி குளோரோயினை அமெரிக்கா நம்முடையது என்று எப்படி கூறமுடிகிறது? இந்திய அரசு உங்களுக்கு அதை கொடுக்க முடிவு செய்தால் மட்டுமே  அது உங்களுடையது” என பதிவிட்டுள்ளார்.