இந்தியாவுக்கு 284 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள்

 

இந்தியாவுக்கு 284 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 284 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

புனே: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 284 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்நிலையில், இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கிந்திய அணி வீரர் சாய் ஹொப் 113 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 39 பந்துகளில் 32 ரன்கள் எடுத்துள்ளார்.