இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் : இபிஎஸ் – ஓபிஎஸ் பயணம்!

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் எலெக்ட்ரிக் கார் : இபிஎஸ் – ஓபிஎஸ் பயணம்!

ஹுண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 

சென்னை: ஹுண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 

edappadi

பெட்ரோல், டீசல் மூலம் செயல்படும் கார்களினால்  சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் என்பதற்காக எலெக்ட்ரிக்  கார்களை இந்தியாவில் தயாரிக்க கார் ஹூண்டாய் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதில் இந்தியாவில் 7000 கோடி மதிப்பீட்டிலும் தமிழகத்தில் 2000 கோடி மதிப்பீட்டிலும் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்படும் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது. 

 

அதன்படி தற்போது இந்தியாவில் முதல் முறையாக எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது. கோனா காரின் ஆன் ரோடு விலை ரூ. 30 லட்சம்.  5 பேர் பயணிக்கக் கூடிய இந்த காரை  ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம். 100 கி.மீ வேகத்தை  இந்த கார் வெறும் 9.7 வினாடிகளில் கடக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் எலெக்ட்ரிக் கார்கள் இயங்கி வருகிறது. இருப்பினும்   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். 

kona

இந்நிலையில் சென்னை  தலைமைச் செயலகத்தில்  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கோனா எலெக்ட்ரிக் காரின் ஓட்டத்தைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

 

பின்னர் அந்த காரில் பயணம் செய்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் காரில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.