இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33, 610 ஆக உயர்வு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே. 3 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டடுள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33, 610 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து 8,373பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,075பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,823 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் 67பேர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.