இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு இரண்டாவது பலி!
தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
டெல்லியைச் சேர்ந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பால் ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு அவரது மகன் மூலம் வைரஸ் பரவியிருந்தது தெரியவந்தது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
முன்னதாக கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் ஏற்கெனவே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 82 ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.