இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்வு!

 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்வு!

ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

ttn

இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 958  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது.  இதுவரை 27, 352   பேர் பலியாகி  உள்ளனர் .   

ttn

இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 67 பேர் குணமடைந்துள்ளனர்.