இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்வு!

 

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்வு!

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 25லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  7 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 

coronavirus

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 20, 471 ஆக ஆதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 652 பேர் உயிரிழந்த நிலையில் 3,960 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,486  பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 49பேர் உயிரிழந்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.