இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்வு… ஒரே நாளில் 88 பேர் பாதிப்பு!

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்வு… ஒரே நாளில் 88 பேர் பாதிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸால் உலகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸால் உலகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படாததால், உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாமல், அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ttn

இந்தியாவில் நேற்று காலை நிலவரத்தின் படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ எட்டியிருந்த நிலையில், 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்  தெரிவித்துள்ளது. அதன் படி இந்தியாவின் 27 மாநிலங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒரே நாளில் 88 பேர் பாதிக்கப்பட்டு, எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர.