“இந்தியாவிற்கு வருவதை எதிர்நோக்குகிறோம்.. சில மணி நேரங்களில் சந்திப்போம்” : டொனால்ட் டிரம்ப் ட்வீட்!

 

“இந்தியாவிற்கு வருவதை எதிர்நோக்குகிறோம்.. சில மணி நேரங்களில் சந்திப்போம்” : டொனால்ட் டிரம்ப் ட்வீட்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியாவிற்கு வரவிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியாவிற்கு வரவிருக்கிறார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகை தர உள்ளனர்.

ttn

இவர்களது வருகையை இந்தியாவே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக அகமதாபாத் முழுவதும் விழாக்கோலம் போல அலங்கரிக்கப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சரியாக 11:40 மணிக்கு அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு வரவிருக்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். இவர்களின் வரவை எதிர்நோக்கி ஏற்கனவே ஆயிரக் கணக்கான மக்கள் விமான நிலையம் அருகே குவிந்துள்ளனர்.

ttn

இந்நிலையில், இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்குகிறோம். நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்!” என்று பதிவிட்டுள்ளார். இந்திய மக்கள் மட்டுமில்லாது டிரம்ப் குடும்பத்தினரும் இந்தியாவிற்கு வருகை தர ஆவலாக இருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் இந்தியா வந்து விடுவார் டிரம்ப்.