இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் தோனி தான் – சுரேஷ் ரெய்னா புகழாரம்

 

இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் தோனி தான் – சுரேஷ் ரெய்னா புகழாரம்

இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் தோனி தான் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் தோனி தான் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அவரது வருகைக்காக அவரது ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாட உள்ளார். அப்போது அவரது ஃபார்மை வைத்தே மீண்டும் தோனி இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவரா என்பது பற்றி தெரியவரும். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னா தோனி பற்றி பேசியுள்ளார்.

ttn

அவர் பேசுகையில், “எதையும் செய்ய முடியும் என இந்திய கிரிக்கெட் அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார். இந்தியாவுக்கு கிடைத்த மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் தோனி தான். இந்த ஆண்டு சென்னை அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் இடம்பெற்றுள்ளனர். பியூஷ், ஹேசல்வுட், சாம் குர்ரான், சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர்  அருமையாக பந்து வீசுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவையாக உள்ளது” என்றார்.