இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மார்ச் மாதத்தில் 46 சதவீதம் குறைந்தது

 

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மார்ச் மாதத்தில் 46 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் 46 சதவீதம் குறைந்தது.

டெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் 46 சதவீதம் குறைந்தது.

பொருளாதார வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மார்ச் மாதத்தில் 46 சதவீதம் குறைந்தது. அதாவது ரூ.156.5 டிரில்லியனாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 292 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இருந்தது. கடந்த மாதம் கொரோனா ஊரடங்கால் நாட்டில் டிஜிட்டல் வணிக பரிவர்த்தனைகள் குறைவாக நடந்தன. கொரோனா ஊரடங்கு மார்ச் 25-ஆம் தேதி தொடங்கியது. அதனால் கடந்த மாதத்தின் கடைசி 7 நாட்களில் தான் இத்தகைய பரிவர்த்தனைகள் மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

online payments

மார்ச் ஏடிஎம் மூலம் மக்கள் பணம் எடுத்த அளவும் 13 சதவீதம் குறைந்தது. அதாவது மார்ச் மாதத்தில் 62 சதவீதமாக குறைந்ததால் 54.71 கோடி ரூபாய் மக்கள் பணம் எடுத்துள்ளனர். ஊரடங்கால் கிரெடிட் அட்டை அல்லது டெபிட் அட்டை போன்ற பயன்பாடும் இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.4 லட்சம் கோடியிலிருந்து இந்த மார்ச் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இத்தகைய அட்டைகளால் செய்யப்படும் ஸ்வைப்களின் எண்ணிக்கையும் 146 கோடியிலிருந்து 53.5 கோடியாக குறைந்துள்ளது.