இத்துனூண்டு நத்தையால அம்மாம்பெரிய புல்லட் ரயிலை நிறுத்த முடியுமா? நிறுத்தியிருக்கு!

 

இத்துனூண்டு நத்தையால அம்மாம்பெரிய புல்லட் ரயிலை நிறுத்த முடியுமா? நிறுத்தியிருக்கு!

நாம காலண்டர்ல தேதி கிழிக்கிறப்போ அடிக்கடி வர்ற அஷ்டமி நவமி, அமாவசை பவுர்ணமி மாதிரி ஜப்பான்ல நிலநடுக்கம் சர்வசாதாரணம். அப்பவும்கூட இந்த புல்லட் ரயில்கள் நேரம்தவறாமல் கடமையே கண்ணாக இருக்கும் என்றால் பாத்துக்கொள்ளுங்கள்.

இம்புட்டுக்காண்டு நத்தையோட வேகத்துக்கும், கண்ணிமைக்கிற வேகத்துல‌ கடந்துப்போகிற புல்லட் ரயிலோட வேகத்துக்கும் எத்தனை ஏணி வச்சாலும் எட்டாது. வேகத்துலயும் சரி, உருவத்துலயும் சரி ரெண்டுமே இருவேறு துருவங்கள்தான். ஆனால், ஒரே ஒரு நத்தை 25 புல்லட் ரயில் சேவையை நிறுத்தியிருக்கு. இது நடந்தது கண்டிப்பா நம்ம ஊர்ல இல்ல. நம்ம ஊர்ல புல்லட்டும் ரயிலும் தனித்தனியாத்தான் இருக்கு, புல்லட் ரயில் பாக்கணும்னா ரயில்மேல புல்லட்டை தூக்கி வச்சிட்டு புல்லட்ரயில்னு சொன்னாதான் உண்டு. இந்தக் கொடுமை நடந்தது ஜப்பானில்.

Snail Bullet Train

ஜப்பான் புல்லட் ரயில்களின் நேரம் தவறாமை வியப்புக்குரிய ஒன்று. நாம காலண்டர்ல தேதி கிழிக்கிறப்போ அடிக்கடி வர்ற அஷ்டமி நவமி, அமாவசை பவுர்ணமி மாதிரி ஜப்பான்ல நிலநடுக்கம் சர்வசாதாரணம். அப்பவும்கூட இந்த புல்லட் ரயில்கள் நேரம்தவறாமல் கடமையே கண்ணாக இருக்கும் என்றால் பாத்துக்கொள்ளுங்கள். அந்தளவுக்கு பர்ஃபெக்ட்டா ஓடுற புல்லட்ரயில்களை, அப்படியே நிப்பாட்டி வச்சிருக்கு ஒரு நத்தை. கிட்டத்தட்ட 25 ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதற்கு காரணம், ரயில்பாதைவழியே அமைக்கப்பட்டிருந்த மின்பெட்டியில் நத்தை ஒன்று புகுந்து, மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நத்தைதான் மின் தடைக்கு காரணமாகி, 25 புல்லட்ரயிலகளின் சேவை பாதிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.