இதெல்லாம் நீங்க கேட்காதீங்க! ஹெல்மெட்டால் தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பல்!!

 

இதெல்லாம் நீங்க கேட்காதீங்க! ஹெல்மெட்டால் தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பல்!!

ஹெல்மெட்டால் அணியாமல் சென்றவர்களை தட்டிக்கெட்ட வாலிபரை ஹெல்மெட்டால் தாக்கி சென்ற சம்பவம் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது 

ஹெல்மெட்டால் அணியாமல் சென்றவர்களை தட்டிக்கெட்ட வாலிபரை ஹெல்மெட்டால் தாக்கி சென்ற சம்பவம் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது 

சென்னை வேளச்சேரி எம்ஜிஆர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). சேல்ஸ் மேனேஜராக தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். நேற்று மந்தைவெளி ஆர்கே மடம் சாலை வழியாக, பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்தனர். சுரேஷ் ஹெல்மெட் அணியாமல் ஏன் இப்படி ஓட்டுகிறீர்கள் என்று கேட்டார். உடனே 2 பேரும் பைக்கை நிறுத்தி சுரேஷின் ஹெல்மெட்டைப்  பறித்து அவரைத்   தலையிலே அடித்து தாக்கினர்.

பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இரண்டு பேர் சுரேஷின் செல்போனை பறித்து சென்றனர். 4 பேரும் நண்பர்கள் என்பது விசாராணையில் தெரியவந்தது.   இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.