இது ஆன்மீக பூமி: அதிமுக பொதுக்கூட்டத்தில் அருள் வந்து சாமி ஆடிய பெண்கள்: உண்மை நிலவரம் என்ன?

 

இது ஆன்மீக பூமி: அதிமுக பொதுக்கூட்டத்தில் அருள் வந்து சாமி ஆடிய பெண்கள்: உண்மை நிலவரம் என்ன?

அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில், அம்மன் பாடலுக்கு சாமி ஆடி, பெண்கள் பக்தி பரவசத்தில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை: அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில், அம்மன் பாடலுக்கு சாமி ஆடி, பெண்கள் பக்தி பரவசத்தில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜமுனாமரத்தூர் பகுதியில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் மேடையில் பேச ஆரம்பிக்கையில் சேவூர் ராமச்சந்திரன், ‘இது ஆன்மீக பூமி, நான் இந்து சமய அறநிலையத்துறையாக இருப்பதால் பக்தி பாடல் பாடுங்கள். பின்னர் பேச்சை தொடங்கலாம்’ என்று கேட்டு கொண்டார்.

அதனால் பாட்டு பாடத்  தொடங்கிய விழுப்புரம் செல்வராஜ், மலையனுர் அங்காளியே…என்ற அம்மன் பக்தி பாடலைப் பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள்  அம்மன் பாடலை கேட்டு பக்தி பரவசத்தில்  அருள் வந்து ஆடினர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.