இதனால் தான் தோனியை எல்லோரும் நேசிக்கிறார்களோ? – இந்த வீடியோவை பாருங்கள்!

 

இதனால் தான் தோனியை எல்லோரும் நேசிக்கிறார்களோ? – இந்த வீடியோவை பாருங்கள்!

கிரிக்கெட் உலகின் ‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது, பரபரப்பு நிறைந்த முகத்தில் உதட்டோர சிரிப்புடன் காணப்படும் ‘தோனி’ என்ற அந்த மனிதன் தான்.

மும்பை: கிரிக்கெட் உலகின் ‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது, பரபரப்பு நிறைந்த முகத்தில் உதட்டோர சிரிப்புடன் காணப்படும் ‘தோனி’ என்ற அந்த மனிதன் தான்.

நட்சத்திர வீரர், 3 ஐசிசி கோப்பைகளை பெற்ற ஒரே கேப்டன், அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர், செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம், இப்படி அனைத்தும் இருந்தும் நிறைய வீரர்களிடம் இல்லாத இலகிய மனதிற்கும் சொந்தக்காரர் அவர். ஆம், தோனியின் இந்த வெற்றிகள் அனைத்திற்கும் அவரது குணநலன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளது.

அவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை விரும்பாதவர்களும் உற்று நோக்கி வருகின்றனர். அவர் ஒரு இடத்திலாவது சறுக்க மாட்டாரா? அந்த இடத்தில் நாம் ஸ்கோர் செய்யலாம் என்பதே நிறைய ‘நல்ல மனிதர்களின்’ எண்ணமாக இருக்கிறது. ஆனால், பாவம் தோனி அவர்களை கண்டு கொள்வதில்லை.

இப்போது கூட, காரில் புறப்பட இருந்த தோனியை பார்த்தவுடன், சிறுவன் ஒருவன் ஓடி வந்து தோனியிடம் பேச முயற்சித்துள்ளான். அவனை கவனித்த தோனி, நிதானமாக நின்று பேசிவிட்டு, கை குலுக்கி விடைபெற்றிருக்கிறார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.