இணையத்தை சூடாக்கும் மோடி குல்பி! 

 

இணையத்தை சூடாக்கும் மோடி குல்பி! 

மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றியடைந்து மீண்டும் பிரதமர் ஆவதை கொண்டாடும் வகையில் குஜராத் ஐஸ் வியாபாரி ஒருவர் மோடி குல்பி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். 

மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றியடைந்து மீண்டும் பிரதமர் ஆவதை கொண்டாடும் வகையில் குஜராத் ஐஸ் வியாபாரி ஒருவர் மோடி குல்பி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். 

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 348 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதனை பாஜகவினர் பல்வேறு விதங்களில் கொண்டாடிவருகின்றனர்.

ss

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி ஒருவர் சீதாப்பழ குல்பி என்ற புதிய ரக ஐஸ் கீரிமை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் மோடியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஸ்கீரிமிற்கு மோடி சீதாப்பழ குல்பி என பெயரிட்டுள்ளார். ஒரு நாளைக்கு 200 கோடி குல்பியை தயாரித்து விற்பனை செய்துவருவதாக கூறும் அந்த ஐஸ் வியாபாரி, மோடி பதவியேற்கும் மே 30 ஆம் தேதி இந்த  மோடி சீதாப்பழ குல்பி 50 சதவீத சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனை சூரத்தை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் ஆசையாக வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்பி எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.