இடைத்தேர்தல்… நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் இவர் தான்..!

 

இடைத்தேர்தல்… நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் இவர் தான்..!

எம்.பி தேர்தலில் ஒரு தொகுதி வழங்கலாம் என்றும் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட அந்த தொகுதியில் உள்ள அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த தொகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருந்து வருகிறார்கள்.

Nanjil

இதனால், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அந்த தொகுதியில் உள்ளவர்களுக்கு கொடுக்காமல், பக்கத்தில் இருக்கும் தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொடுக்க அதிமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. பல கட்ட போட்டி இருந்து வரும் நிலையில் கடைசியில் இரண்டு பேரில் ஒருவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிமுகவில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.  

nanjil

நெல்லைக்காரர் ஒருவருக்கும், திரைப்பட நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் பி.சி. அன்பழகனுக்கும் இடையில் தான் அதிக போட்டி நிலவி வருகிறது. தலைமையுடன் நெருக்கமாக உள்ளதால் நாங்குநேரியில் பி.சி.அன்பழகனுக்கு வாய்ப்புகள் அதிகம்.  எம்.பி தேர்தலில் ஒரு தொகுதி வழங்கலாம் என்றும் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால் நாங்குநேரியில் நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு வாய்ப்புகள் அதிகம்.