இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி!
Sep 21, 2019, 13:46 IST1569053769000
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தி.மு.க கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தி.மு.க கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளின் இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிட போகிறதா இல்லை தி.மு.க போட்டியிடப் போகிறதா என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.