இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிலி… ஆள்பிடித்து தந்தால் ரூ.5000..!

 

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிலி…  ஆள்பிடித்து தந்தால் ரூ.5000..!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதற்காக ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக தரப்பு இப்போதே தொடங்கிவிட்டது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதற்காக ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக தரப்பு இப்போதே தொடங்கிவிட்டது.

 மூட்டையில் பணத்தை கட்டி வைத்துக் கொண்டு ஆள் பிடித்து வருகின்றனர் என்பதுதான் ஹைலைட். விஷயம் என்னவென்றால் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவை விட திமுகவிற்கு நாங்குநேரி தொகுதியில் மட்டும் 34 ஆயிரத்து 710 ஓட்டுகள் அதிகம் கிடைத்தது. நெல்லை மக்களவை தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் பாளையங்கோட்டைக்கு அடுத்து 2வதாக இந்த தொகுதியில் ஓட்டு வித்தியாசம் அதிகம்.

 இதுதான் அதிமுகவிற்கு கிலியாக உள்ளது. இதனால், நாங்குநேரி இடைத்தேர்தலை வாழ்வா…சாவா பிரச்னையாக அதிமுக பார்க்கிறது. ஒவ்வொரு ஊராக சென்று பூத் ஏஜென்டிற்கு இப்போதே ஆள் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பெண்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் கச்சிதமாக போய் விடும் என்பதற்காக பெண்களை மட்டும்தான் குறி வைத்து தேடுகின்றனர். 

ஆனால் பெண்கள் யாரும் தயாராக இல்லை என்பதால் பூத் ஏஜென்டிற்கு ஆள் பிடித்துத் தந்தால் ₹5 ஆயிரம் தருகிறோம் என அதிமுகவினர் கூவி வருகின்றனர்.