இடியால் நள்ளிரவில் உருவான புதிய அருவி… மக்கள் உற்சாகம்!

 

இடியால் நள்ளிரவில் உருவான புதிய அருவி… மக்கள் உற்சாகம்!

நள்ளிரவு பெரும் சப்தத்துடன் விழுந்த நீர் இடி அங்கு ஒரு புதிய அருவியை உண்டாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தையொட்டி பச்சைமலை பகுதியின் மலைப்பகுதியில் செடி கொடிகள் படர்ந்து காணப்படும். இங்கு நேற்று  நள்ளிரவு பெரும் சப்தத்துடன் விழுந்த நீர் இடி அங்கு ஒரு புதிய அருவியை உண்டாகியுள்ளது.

ttn

பூகம்பம் போல பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த இடி  விழுந்த இடத்திலிருந்து நீர் ஊற்றை  உருவாக்கி இயற்கையானது அதிசயத்தை கண்முன்னே நிறுத்தியுள்ளது . இதுகுறித்து கூறியுள்ள அக்கிராம மக்கள், மலை பிளந்து அருவி உருவாகியுள்ளது இயற்கையின் அற்புதம் என்று    பூரிப்புடன் தெரிவித்துள்ளனர். 

ttn

இந்த திடீர் அருவி குறித்து கேள்விப்பட்ட சுற்றுவட்டார மக்கள் அங்கு வந்து  கண்டுகளிப்பதுடன் குளித்துவிட்டும் செல்கின்றனர்.