ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்: மீட்பதில் சிக்கல்..!

 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்: மீட்பதில் சிக்கல்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 2 வயது சிறுவன் சுர்ஜித் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 2 வயது சிறுவன் சுர்ஜித் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். நேற்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி 15 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளையில் உள்ள சிறுவன் தற்போது 70 அடிக்குச் சென்றுவிட்டான். அவனை மீட்க, மீட்புக் குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Surjith

இது குறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 3 முறை கயிரைக் கொண்டு கட்டியிழுத்தும் சிறுவனை மீட்க முடியவில்லை. சிறுவன் 70 அடிக்குச் சென்ற பிறகும் சிறுவனின் சுவாசம் கேட்ட நிலையில், தற்போது அவன் மீது சேறு விழுந்துள்ளதால் அவன் சுவாசிக்கிறானா என்பது தெரியவில்லை. இருந்தாலும், குழந்தையைப் பத்திரமாக மீட்டெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.