ஆழ்கடலில் தத்தளித்த 20 மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்

 

ஆழ்கடலில் தத்தளித்த 20 மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்

விசைப்படகு பழுதடைந்ததால் நடுகடலில் தத்தளித்த மீனவர்கள் 20 பேரை இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்டு கரைசேர்த்தனர்.  குமரி மாவட்டம் அருகே சின்னத்துறை என்னுமிடத்தை சேர்ந்தவர் ஷிபு (40). இவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் ஷிபு உட்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 பேரும், கேரளாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 20 பேர்  கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

விசைப்படகு பழுதடைந்ததால் நடுகடலில் தத்தளித்த மீனவர்கள் 20 பேரை இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்டு கரைசேர்த்தனர்.  குமரி மாவட்டம் அருகே சின்னத்துறை என்னுமிடத்தை சேர்ந்தவர் ஷிபு (40). இவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் ஷிபு உட்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 பேரும், கேரளாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 20 பேர்  கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

fisherman

 தித்திரா தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சென்ற விசைப்படகுகளில், ஒன்று பழுதடைந்தது. உடனே படகில் இருந்தவர்கள் பழுதடைந்த படகை கரைக்கு இழுத்து கொண்டு சென்றனர். 
இதையடுத்து படகின் உரிமையாளர் ஷிபு, விசைப்படகுடன் மீன்பிடிக்க தேவைக்கு கொண்டு செல்லும் பைபர் படகை எடுத்துக் கொண்டு, அதில் கவுரத் தீவு சென்றுள்ளார். அங்கிருந்த உறவினர்களுக்கு படகு பழுதானது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் இந்தத் தகவலை மீன்பிடிச் சங்க அலுவலகத்திலும், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.அவர்களை மத்திய, மாநில அரசு தலையிட்டு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். 

fisherman

இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படையை சேர்ந்த  வீரர்கள் நடுக்கடலில் விசைப்படகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீட்டு லட்சத்தீவுக்கு அருகில் உள்ள ’அன்றோன் தீவு’ என்னுமிடத்தில் கரை சேர்த்தனர்.