ஆள்பவர்களை அலறவிடுவது தான் விஜய்யின் சர்கார்: பட்டையை கிளப்பும் தளபதி ரசிகர்கள்

 

ஆள்பவர்களை அலறவிடுவது தான் விஜய்யின் சர்கார்: பட்டையை கிளப்பும் தளபதி ரசிகர்கள்

தமிழகத்தில் ஆளும் மற்றும் ஆள நினைக்கும் கட்சிகளை அலறடிக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள விஜய்யின் ‘சர்கார்’ குறித்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஆளும் மற்றும் ஆள நினைக்கும் கட்சிகளை அலறடிக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள விஜய்யின் ‘சர்கார்’ குறித்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் அரசியல் பாணியில் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்ந்து நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

தமிழக அரசியல் களத்தில் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் களமிறங்கி வரும் நிலையில், தளபதி விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு ஒரு முன்னோட்டமாக இந்த ‘சர்கார்’ படத்தில் நடித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ டீசரில், கார்ப்ரேட் கிரிமினலாக மாஸ் இண்ட்ரோ கொடுக்கும் விஜய், கெட்டவனாக நடித்து கதையின் நாயகனாக மக்களின் நலனுக்காக புதிய சர்கார் அமைக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

sarkar

மெர்சலில் கொஞ்சம் அரசியல், சர்காரில் அரசியலில் மெர்சல் பண்ணியிருப்பதாக விஜய் தெரிவித்தது போல், அவரது ரசிகர்கள் சர்கார் போஸ்டர்களை மெர்சலாக்கி அரசியல்வாதிகளை வெறுப்பேற்றியுள்ளனர்.

sarkar

மதுரை பகுதிகளில் சர்கார் படத்தின் ரிலீசையொட்டி தளபதி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளுங்கட்சி, எதற்கும் உதவாத எதிர்க்கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன

sarkar

இதேபோன்று, ‘கழகங்கள் ஆண்ட தமிழகம் போதும்..கலங்கம் இல்லா தமிழன் தளபதியின் சர்கார் வருக..நல்லாட்சி தருக..’, ’களமும், கட்சியும் விரைவில் மாறும்.. நண்பா இது மந்திரிகள் ஆடும் பொம்ம சர்கார் அல்ல.. மக்கள் ஆளும் நம்ம சர்கார்’, ’ஆள்பவரையும் அலற வைக்கும்… ஆள நினைப்பவர்களையும் பதற வைக்கும்-அது தான் எங்கள் சர்கார்’ உள்ளிட்ட ஏராளமான அரசியல் வசனங்கள் திமுக, அதிமுகவை பாரபட்சம் இன்றி விஜய் ரசிகர்கள் வம்புக்கு இழுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.