ஆளே இல்லாத இடத்தில் யானை செய்த அறிவு பூர்வமான செயல்.. வைரல் வீடியோ !

 

ஆளே இல்லாத இடத்தில் யானை செய்த அறிவு பூர்வமான செயல்.. வைரல் வீடியோ !

ஆறறிவு கொண்ட மனிதர்கள் கூட குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடாமல் ஆங்காங்கே போட்டு விட்டு செல்கின்றனர்.

ஆறறிவு கொண்ட மனிதர்கள் கூட குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடாமல் ஆங்காங்கே போட்டு விட்டு செல்கின்றனர். ஆனால், விலங்குகளோ ஐந்தறிவு கொண்ட நாங்கள் உங்களை விட ஒசத்தி தான் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படி அறிவுப் பூர்வமாக விலங்குகள் செய்யும் பல வீடியோக்கள் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதே போல, யானை ஒன்று குப்பைத்தொட்டியில் போடும் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. 

 

அந்த வீடியோவில் நடந்து சென்று கொண்டிருக்கும் யானை ஒரு வீட்டின் அருகே குப்பைகள் கிடைப்பதைப் பார்த்து அதனை எடுத்து, தன் தும்பிக்கை மற்றும் கால்களின் உதவியுடன் அருகே இருக்கும் குப்பைத் தொட்டியில் போடுகிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் ‘விலங்குகள் மிகவும் புத்திசாலி! குறிப்பாக மக்களுடன் ஒப்பிடும்போது’ ‘யானைக்குக் கூட குப்பை போடக் கூடாது என்பது தெரிந்திருக்கிறது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.