ஆல்ப்ஸ் மலையின் பனிச்சரிவில் உயிருடன் புதைந்த தாய் -மகள் உள்பட மூவர் பலி!

 

ஆல்ப்ஸ் மலையின் பனிச்சரிவில் உயிருடன் புதைந்த தாய் -மகள் உள்பட மூவர் பலி!

 ஆல்ப்ஸில் பனிப்பாறை சரிந்ததில் மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 ஆல்ப்ஸில் பனிப்பாறை சரிந்ததில் மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியின் துரியங்கியாவில் உள்ள ஹவுடெரேடா  பகுதியைச் சேர்ந்த 25 வயதான தாய் மற்றும் அவரின் மகள் இருவரும் இத்தாலியில் உள்ள  ஆல்ப்ஸில் பனிப்பாறையில்  பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களுடன் மற்றொரு சிறுமியும் வந்துள்ளார். அதேபோல் டீஃபெல்செக் பிஸ்டைத்தை  சேர்ந்த தந்தை ஒருவர் தனது 11மகனுடன் அங்கு வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் 1600 அடி நீளமுள்ள அந்த பனிப்பாறை திடீரென்று  சரிந்துள்ளது. இதில் தாய், மகள் மற்றும் உடன் வந்த சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.  11 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தற்போது பனிச்சறுக்கில் புதைந்தவர்களின் உடலைத் தேடும் பணிகளில் மீட்புடையினர் ஈடுபட்டு வருகின்றனர்.