ஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு!
இன்று முதல் ஆரோக்கியா பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆரோக்கியா பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தால் பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் விலையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் திருமலா, டோட்லா, ஜெர்ஸி,ஹெரிடேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்தின. இந்நிலையில் ஆரோக்கியா நிறுவனமும் தற்போது பால் விலையை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் ஆரோக்கியா பால் லிட்டர் ரூ.62-க்கு ஏற்கனவேவிற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 2ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.64 க்கு விற்படுகிறது. தயார் விலை 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாயிலிருந்து 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆரோக்கியா ஸ்டேண்டர்டு பால், ஆரோக்கியா டோனுடு பாலின் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.