ஆபாச படம் பார்த்து நடந்த அநியாயம் -ஏழாம் க்ளாஸ் மாணவியை கெடுத்த ஏழு பத்தாம் க்ளாஸ் மாணவர்கள்.. 

 

ஆபாச படம் பார்த்து நடந்த அநியாயம் -ஏழாம் க்ளாஸ் மாணவியை கெடுத்த ஏழு பத்தாம் க்ளாஸ் மாணவர்கள்.. 

அசாம் மாநிலத்தில் கௌகாத்தியில் ஒரு பள்ளியில் படிக்கும் 7 ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள்,ட்ரீட் தருவதாக கூறி இரவு உணவுக்கு வரசொல்லியிருந்தனர்

குவஹாத்தியில் வடக்கு அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்  ஒரு 12 வயது சிறுமி ஏழு பள்ளி  நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

அசாம் மாநிலத்தில் கௌகாத்தியில் ஒரு பள்ளியில் படிக்கும் 7 ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள்,ட்ரீட் தருவதாக கூறி இரவு உணவுக்கு வரசொல்லியிருந்தனர் வெள்ளிக்கிழமை மாலை  அவர்களின் பேச்சை நம்பிய சிறுமி அவர்கள் சொன்ன இடத்துக்கு போனார்.

gang rape

அங்கிருந்து அவர்கள் சிறுமியை  ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.பின்னர், அவர்கள் தாங்கள் அவரை உயிரோடு விட்டால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்தனர்.அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டது போல தோன்றுவதற்காக சிறுமியை கொன்று  உடலை ஒரு மரத்தில்  தொங்கவிட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு  வரை சிறுமி  வீடு திரும்பாததால்,அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அவரை தேடினர்.ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. 
மறுநாள் காவல்துறையினர்  அந்த கிராமத்தை சேர்ந்த சில சிறுவர்களை பிடித்து விசாரித்து அவர்கள் காமித்த  காட்டை சோதனையிட்டபோது,சனியன்று சிறுமியின்  உடல் ஒரு மரத்தில் தொங்குவதைக் கண்டுபிடித்தார்கள். 

arrest

சிறுமியின் மாமா பத்திரியாளர்களை சந்தித்து,சிறுமி  ஏழு சிறுவர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டினார் , இந்த சம்பவத்தால் அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க மாஜிஸ்திரேட்டிடம் அவர்  கோரினார்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும்,அவர்கள் மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.