ஆந்திராவுக்கு 4 தலைநகரங்கள்… சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவை சிதைத்த ஜெகன் மோகன் ரெட்டி!
அமராவதியை மாநிலத்தின் கனவு தலைநகராக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கைவிட்டு விட்டதாகவும், அதற்கு பதிலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 4 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிந்த பிறகு, அப்போது ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை புதிய தலைநகரமாக அறிவித்தார். அந்த அமராவதியை கனவு தலைநகராக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக தெரிவித்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றது முதல் சந்திரபாபு நாயுடுவை குறிவைத்து தாக்கி வருகிறார். தற்போது மாநிலத்தின் கனவு தலைநகரமாக அமராவதியை உருவாக்கும் அதனை திட்டங்களை கைவிட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் 4 தலைநகரங்களை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி. டி.ஜி. வெங்கடேஷ் இது குறித்து கூறுகையில், ஆந்திராவுக்கு 4 தலைநகரங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய பா.ஜ. தலைமையிடம் ஜெகன் மோகன் ரெட்டி பேசியுள்ளார் என தெரிவித்தார். விசாகப்பட்டிணம், காகிநாடா, குண்டூர் மற்றும் கடப்பா என இடங்களில் தலைநகரம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.