ஆணவக் கொலைக்கு திராவிட இயக்கங்களே காரணம்: ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

 

ஆணவக் கொலைக்கு திராவிட இயக்கங்களே காரணம்: ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகு தான் ஆணவப் படுகொலைகள் நடைபெற தொடங்கியதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகு தான் ஆணவப் படுகொலைகள் நடைபெற தொடங்கியதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாரதிய ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகுதான் தமிழகத்தில் ஜாதிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, ஆணவப் படுகொலைகள் நடைபெற தொடங்கியது. எனவே கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்தது ஏற்புடையது அல்ல என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.