ஆணவக்கொலை காட்டுமிராண்டித்தனம்! ஆணவக்கொலை மிருகத்தனம்!

 

ஆணவக்கொலை காட்டுமிராண்டித்தனம்! ஆணவக்கொலை மிருகத்தனம்!

காவல்துறையினரின் தொடர்ச்சியான அலட்சியம், ஒரு கொலையில் வந்து விழுந்திருக்கிறது. ஆணவ கொலை சூத்திரதாரிகளான ஹேமாவதியின் பெற்றோர், தாத்தா உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுதான் சாதி பெருமை போலும்!

ஆணவக்கொலைகள் மனிதகுலத்திற்கே அவமானம். அதிலும், குழந்தைப்பெற்ற ஒரு வாரத்தில், பச்ச உடம்பாய் இருக்கிற ஒரு பெண்ணை, அவளின் தந்தையே கடத்திச்சென்று கொலை செய்வதெல்லாம் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். ஆந்திராவில்தான் இந்த அவலம் அதுவும் கடந்தவாரம் நடந்திருக்கிறது. ஹேமாவதி என்ற மேல்சாதி பெண் தன் பெற்றோரின் விருப்பத்தை மீறி, கேசவுலு என்ற தலித் இளைஞருடன் சென்று திருமணம் செய்து வாழ்ந்திருக்கிறார். இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கை விருட்சமாகி, கடந்தவாரம் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்திருக்கிறார் ஹேமாவதி.

Hemavathi murdered

இந்நிலையில், கடந்தவாரம் ஹேமாவதியின் தந்தை பாஸ்கரின் உத்தரவின்பேரில், கூலிப்படைமூலம் கடத்தப்பட்ட ஹேமாவதியை பிணமாகத்தான் காண முடிந்திருக்கிறது. இருவரின் காதல் பிரச்னை ஏற்கெனவே பலமுறை காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது பெண்ணின் குடும்பத்தார் மூலம். ஒவ்வொரு முறையும் ஹேமாவதி, தன் காதலருடன் இருப்பதையே விருப்பமாக தெரிவித்திருந்தும், மேல்சாதியினரின் தொடர்ச்சியான‌ தலையீட்டின்பேரில் காவல்துறை பாஸ்கர் குடும்பத்தின்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவே இல்லை. காவல்துறையினரின் தொடர்ச்சியான அலட்சியம், ஒரு கொலையில் வந்து விழுந்திருக்கிறது. ஆணவ கொலை சூத்திரதாரிகளான ஹேமாவதியின் பெற்றோர், தாத்தா உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுதான் சாதி பெருமை போலும்!