ஆட்டத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்… பீதியில் கழக உடன்பிறப்புகள்..!

 

ஆட்டத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்…  பீதியில் கழக உடன்பிறப்புகள்..!

இதனால் பல காலம் உண்மையாக கட்சிக்கு உழைத்தவர்கள் புறம் தள்ளப்படலாம் என்பதால் திமுகவுக்குள் இப்போதே கலவரம் ஏற்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி மாற்றுக் கட்சியில் இருக்கும் இளைஞர்களை திமுகவுக்கு இழுத்து வரும் அசைண்மெண்டை அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கி இருக்கிறார்.

udhayanidhi

பதவியேற்ற மறுநாளே இளைஞரணியை கூட்டி ஆட்டத்தை தொடங்கி விட்டார்.  இளைஞரணி செயலாளர் ஆகிய பிறகு கட்சியில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின். டி.ஆர்.பாலு, அன்பில் பொய்யாமொழி, பொன்முடி என அவரைச்சுற்றி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இது அப்போதைய திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. சிலர் இதனால் புறக்கணிக்கவும் பட்டனர்.udhayanidhi

மு.க.ஸ்டாலின் நிழலில் ஒட்டிக் கொண்டவர்களின் வாரிசுகள் அவர்களது தந்தைகளைப்போலவே இப்போது உதயநிதியின் நண்பர்களாகி அவருடன் உறவாடி வருகின்றனர். டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா (எம்.எல்.ஏ) அன்பில் மொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ் மொய்யாமொழி,(எம்.எல்.ஏ), பொன்முடி மகன் கவுதமசிகாமணி (எம்.பி) என இவர்கள் அனைவரும் உதயநிதியின் நிழலாகத் தொடர்கின்றனர்.udhayanidhi

இதனால், அப்பா தனது நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி பதவி கொடுத்ததை போல, அவரின் நண்பர்களின் பிள்ளைகள் இப்போது தனக்கு நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கே உதயநிதி முக்கியத்துவம் கொடுப்பார் என கூறப்படுகிறது.  இதனால் பல காலம் உண்மையாக கட்சிக்கு உழைத்தவர்கள் புறம் தள்ளப்படலாம் என்பதால் திமுகவுக்குள் இப்போதே கலவரம் ஏற்பட்டுள்ளது.  உதயநிதியின்  ஆட்டத்தில் உண்மையான திமுகவினர் கரைசேர்வார்களா? என்பதே இப்போதைய கேள்வி..!