ஆட்சி போய்விட்டால் அதிமுக என்ற ஒன்று இருக்குமா என்றே தெரியாது: கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு!

 

ஆட்சி போய்விட்டால் அதிமுக என்ற ஒன்று இருக்குமா என்றே தெரியாது: கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு!

ஆட்சி போய்விட்டால் அதிமுக என்று ஒன்று இருக்குமா என்று தெரியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆட்சி போய்விட்டால் அதிமுக என்று ஒன்று இருக்குமா என்று தெரியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனம் மதச்சார்பின்மையை காக்க கரம் கோர்ப்போம் என இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் பாஜக ஆட்சியில் தான் பாபர் மசூதி இடித்தார்கள், அதே பாஜக முதல்வர் அதே இடத்தில் யோகி ஆதித்யநாத் ராமர் கோவில் கட்டப்போவதாகச் சொல்கிறார். அப்படி இருக்க இவர்கள் எப்படி அரசியல் சாசனத்தை காப்பாற்றுவார்கள்.

அதிமுக கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்று நமக்கே தெரியும் அதிமுக என்கிற கட்சி ஆட்சியில் இருப்பதால் மட்டும் தான் இருக்கிறது ஆட்சி போய்விட்டால் அதிமுக என்று ஒன்று இருக்குமா என்று தெரியாது. அதிமுகவோடு சேர்ந்தால் பிஜேபிக்கு பலம் வராது பிஜேபியோடு சேர்ந்தால் அதிமுகவிற்கு பலம் வராது’ என்று கூறினார்.