ஆட்சியை கவிழ்க்க டிடிவி என்னிடம் பேரம் பேசினார்: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

 

ஆட்சியை கவிழ்க்க டிடிவி என்னிடம் பேரம் பேசினார்: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு டிடிவி தினகரன் என்னிடம் பேரம் பேசினார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மதுரை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு டிடிவி தினகரன் என்னிடம் பேரம் பேசினார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து மதுரையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் டிடிவி தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் எனக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

டிடிவி தினகரன் என்னிடம் வந்து தனக்கு ஆதரவாக 42 எம்எல்ஏ.க்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 11 பேர் இருக்கிறார்கள் எனவே நம்மிடம் 53 எம்எல்ஏ.க்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று பேரம் பேசினார். ஆனால் என் மனசாட்சி இதற்கு சம்மதிக்கவில்லை என்றார்.