ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்

 

ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் கடிதம் அளித்தனர்.

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் கடிதம் அளித்தனர்.

மத்திய பிரதேசத்தில் நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலை நிறைவடைந்தது. இறுதியாக காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளிலும், பாஜக 109 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 1 தொகுதியிலும் சுயேட்சைகள்  4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்கள் தேவை என்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மதியம் ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பின்போது திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.