’ஆடைகளை அவிழ்த்துப்போட்டு…’ காயத்திரிக்கு எதிராக திருமா வெளியிட்ட வீடியோ..!

 

’ஆடைகளை அவிழ்த்துப்போட்டு…’ காயத்திரிக்கு எதிராக திருமா வெளியிட்ட வீடியோ..!

அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில். ஆகவே, அது அவர்களுக்கு கலையாக தெரியலாம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்து கடவுள்கள் குறித்த தனது பேச்சை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார். 

காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், அதே சமயம் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் பேசி, டில்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ” விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து தர்மத்தில் உள்ள குறைபாடுகளை சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், கத்துக் குட்டிகளுக்கு தெரியாது. குடித்து விட்டு கார் ஓட்டுகிற தற்குறிகளுக்கு தெரியாது. 

thirumavalavan

பெண்களை வைத்து தொழில் செய்து, கைதாகி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகி, ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த தற்குறிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன தெரியும்? அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில். ஆகவே, அது அவர்களுக்கு கலையாக தெரியலாம்.thiruma

அதை கலை என்ற அடிப்படையில் தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். அந்த கத்துக் குட்டிகளுக்கு விடை சொல்லப் போகிறோம் என்ற முறையிலே, அவர்களுக்காக நாம் நமது சக்தியை விரயம் ஆக்குவது என்பது வீண் என என்னை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தோழர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள். நாம் மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற பதர்களுக்கு பதில் சொல்வதற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம். பா.ஜ., ஆர்எஸ்எஸ் திட்டமிட்டே என் பேச்சை சர்ச்சை ஆக்குகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

thuruma

திருமாவளவனின் பொத்தாம் பொதுவான நடிகைகளைப் பற்றிய இந்த பேச்சிற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.