ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : மூளையாகச் செயல்பட்ட இருவர் கைது!

 

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : மூளையாகச் செயல்பட்ட இருவர் கைது!

இவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு இருந்தும் கடந்த 26 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, அங்கு பைக்கில் வந்த மூன்று பேர், குருமூர்த்தி வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் வரதராஜ புரத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு இருந்தும் கடந்த 26 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, அங்கு பைக்கில் வந்த மூன்று பேர், குருமூர்த்தி வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர். அச்சமயம் அங்கிருந்த நாய், அவர்களைப் பார்த்துக் குரைத்ததால் பெட்ரோல் குண்டு வீசாமலேயே  அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்று பணியிலிருந்து காவலர் மணிகண்டன்  மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். 

ttn

அவர்களைப் பிடிப்பதற்காகக் காவலர் சசிகுமார் தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார், இந்த சம்பவம்  தொடர்பாக 8 பேரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட டிங்கர் குமார் மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பேரையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.