ஆசிரியர் கண்டிப்பால் வகுப்பிலேயே சிறுநீர் கழித்த மாணவி ! அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் !

 

ஆசிரியர் கண்டிப்பால் வகுப்பிலேயே சிறுநீர் கழித்த மாணவி ! அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் !

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகூடாவில் பெண்கள் கல்லூரியில் சுவாதி  என்பவர் படித்து வருகிறார். வியாழன்று கல்லூரியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சுவாதி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டுமென அனுமதி கேட்டார். ஆனால் ஆசிரியை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுநீரை அடக்க முடியாமல் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விட்டார்.

ஆந்திராவில் கல்லூரி ஒன்றில் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்ததற்காக சக மாணவிகள் கேலி செய்ததால் அவமானம் தாங்கமால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகூடாவில் பெண்கள் கல்லூரியில் சுவாதி  என்பவர் படித்து வருகிறார். வியாழன்று கல்லூரியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சுவாதி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டுமென அனுமதி கேட்டார். ஆனால் ஆசிரியை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுநீரை அடக்க முடியாமல் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விட்டார். இதைப் பார்த்த சக மாணவிகள் சிரித்து விட வேதனைப்பட்டார் ஸ்வாதி பின்னர் வகுப்பறையை சுத்தம் செய்வதாக கூறிச் சன்ற மாணவி நேராக விடுதிக்கு சென்று தன் அறையில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுவாதி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவி உயிரிழப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுநீர் கழிக்க அனுமதி கொடுக்காமல் பெண்ணை வேதனைப் படுத்தி கொன்று விட்டார்கள் என்று போலீசாரிடம் குற்றம்சாட்டினர்.

ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருப்பதாக கூறும் அதே வேளையில் இதுபோன்ற கிறுக்குத் தனமாக ஏதாவது செய்யப் போக ஒரு உயிரிழப்பே நேர்ந்து விடுகிறது. கல்லூரி மாணவிகளும் இதுபோன் விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தால் அநியாயமாக ஒரு உயிர் போய் இருக்காது. எதெற்கெடுத்தாலும் கேலி செய்து சிரித்து அவமானப்படுத்துவதை தவிர்க்கலாமே?