ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே காதல்! நெருக்கமான புகைப்படத்தை அனுப்பி ஷாக் கொடுத்த காதலன்!!

 

ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே காதல்! நெருக்கமான புகைப்படத்தை அனுப்பி ஷாக் கொடுத்த காதலன்!!

காதலித்த போது நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பியதால் இளம்பெண் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்த போது நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பியதால் இளம்பெண் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம். இவர் அப்பகுதியிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். இவரும், அதே  கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, கடந்த மாதம் 30-ஆம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. காதலிக்கு விரைவில் கல்யாணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் ஆத்திரமடைந்து மாப்பிள்ளையின் செல்போனுக்கு காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

love

இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர். இதில் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது மருத்துவமனையில் அந்த பெண் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். உன் மகளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தையிடம் சிவஞானம் மிரட்டியுள்ளார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிபாடி காவல்துறையினர் சிவஞானத்தை கைது செய்துள்ளனர்.