ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

 

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காளதேசம் இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

துபாய்: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காளதேசம் இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் ஓய்வு பெற்ற ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

சூப்பர்-4 சுற்று முடிவில் இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன. இதையடுத்து இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.