ஆங்கிலம், இந்தியில் வங்கி பணியிட தேர்வு! மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி – கனிமொழி
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வங்கி பணியிட தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் என சமீபத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுவாக ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கிடையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வங்கி பணியிட தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் என சமீபத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வங்கி பணியிடங்களுக்கு தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் திருமிகு.@nsitharaman அவர்களை கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/QwH8ZKpC4h
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 15, 2019
இந்தநிலையில் கனிமொழி எம்.பி. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வங்கி பணியிடங்களுக்கு தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் திருமிகு.@nsitharaman அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.’ பதிவிட்டுள்ளார்.