‘அவளுக்காக 3 ஆயிரம் செலவு பண்ணிருக்கேன்; இப்போ வேணாம்னு சொல்லிட்டா’ : ‘தேவதை கண்டேன்’ தனுஷ் பாணியில் போலீசாரிடம் மல்லுக்கட்டிய இளைஞர்!

 

‘அவளுக்காக 3 ஆயிரம் செலவு பண்ணிருக்கேன்; இப்போ வேணாம்னு சொல்லிட்டா’ : ‘தேவதை கண்டேன்’ தனுஷ் பாணியில் போலீசாரிடம் மல்லுக்கட்டிய இளைஞர்!

தன்னை காதலித்த பெண் தற்போது காரணமே இல்லாமல் தன்னை  வேண்டாம் என்று சொல்வதாகக் கூறி அங்கிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை: காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் வசித்து வருபவர் விக்கி. இவர் நேற்று நள்ளிரவில் பூந்தமல்லி காவல்நிலையத்திற்குள் நுழைந்து  தன்னை காதலித்த பெண் தற்போது காரணமே இல்லாமல் தன்னை  வேண்டாம் என்று சொல்வதாகக் கூறி அங்கிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

love

இதையடுத்து திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டு, சாலையில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும்  அந்த பெண்ணுக்காகத் தான் செலவு செய்த  3 ஆயிரம் ரூபாயை அவரிடமிருந்து வாங்கி தாருங்கள் என்றும் என்னை ஏமாற்றியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

 

youth

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த இளைஞரை சமாதானம் செய்து, போதை தெளிந்தபின் புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.