“அவர் மட்டும் மகன் இல்ல..நானும் கருணாநிதி மகன் தான்”.. மு.க அழகிரி வேதனை !

 

“அவர் மட்டும் மகன் இல்ல..நானும் கருணாநிதி மகன் தான்”.. மு.க அழகிரி வேதனை !

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆண்டு தோறும் வெகு விமர்சையாக, குறைந்தது 3 நாட்களாவது கறி விருந்துடன் நடக்கும். ஆனால்,

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆண்டு தோறும் வெகு விமர்சையாக, குறைந்தது 3 நாட்களாவது கறி விருந்துடன் நடக்கும். ஆனால், அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு வெறும் கேக் வெட்டுவதோடு அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கின்றனர். இதனால் மனமுடைந்த அழகிரி, தன் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் பிறந்தநாளன்று தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார். 

ttn

தனது 70-வது பிறந்தநாளான இன்று மதுரையில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்  அழகிரி. ஆனால் அவரை மதுரையில் இருக்க வைக்க, வழக்கறிஞர் மோகன் குமார் தனது இல்லத்திருமண நிகழ்வை தலைமையேற்று நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அழகிரி இன்று அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ttn

அந்த நிகழ்ச்சியில் பேசிய அழகிரி, ” ஒருவர் மட்டுமே கருணாநிதியின் மகன் இல்லை. நானும் அவரின் மகன் தான். இந்த காலத்தில் எல்லாரும் நன்றி இல்லாமல் நடந்து கொள்வது எளிதாகிவிட்டது. சில நிகழ்ச்சிகளில் என்னைப் பார்த்தால் அதிமுகவினர் கூட வந்து பேசுகின்றனர். ஆனால், திமுகவினர் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். என்னைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். இந்த நிலை எப்போது மாறும் என்று எனக்குத் தெரியும்” என்று வேதனையுடன் பேசினார்.