‘அவர் ஒன்னும் சாமி கிடையாது’ : பாரதிராஜாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கரு பழனியப்பன்

 

‘அவர் ஒன்னும் சாமி கிடையாது’ : பாரதிராஜாவுக்கு எதிராக போர்க்கொடி  தூக்கும் கரு பழனியப்பன்

அவரால் தமிழ் செனிமாவின் முகம் மாறியிருக்கலாம். அதற்கான அவரை சாமியாக கும்பிட வேண்டாம்

சென்னை: இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் இருக்கின்றன. இது என்ன இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? என்று கரு. பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். 

barathiraja

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தது குறித்த விவாதத்தைச் செயலாளர் செல்வமணி முன்வைத்தார். 

palaniyapan

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  கரு. பழனியப்பன் உள்ளிட்ட சிலர்,எப்படி எங்களை ஆலோசிக்காமல் பாரதிராஜாவுக்கு பதவி கேட்பீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் இருக்கின்றன. இது என்ன இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா?  பெரும்பாலும் இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு வராத பாரதிராஜா, கடந்த முறை மட்டுமே வந்தார்.  அவரால் தமிழ் செனிமாவின் முகம் மாறியிருக்கலாம். அதற்கான அவரை சாமியாக கும்பிட வேண்டாம். இதை அவரும் விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன். அவரும் மற்றவர்களைப் போல தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும்’ என்றார். கரு.பழனியப்பனின் இந்த கருத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.