அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் ஒட்டிய தாய்!

 

அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் ஒட்டிய தாய்!

அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை தாயே ஒட்டிய கொடூர சம்பவம் பிகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

பாட்னா: அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை தாயே ஒட்டிய கொடூர சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கைக்குழந்தையைக் கையாள்வது என்பது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம் தான். வலி , பசி, தாகம் போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தைகள் அழுவது இயல்பு. அழுகையின் அளவு இயல்பை தாண்டினால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.

baby

இந்நிலையில், பிகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியில் தன்னுடைய குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்த காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோபமான தாய் ஒருவர் குழந்தையின் இரு உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஓட்டியுள்ளார்.

fevikwik

பணி  முடிந்து வீடு திரும்பிய தந்தை, குழந்தை ஏன் அமைதியாக இருக்கிறது என பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரை வந்து கொண்டிருந்தது. இதுகுறித்த காரணம் கேட்ட போது குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டியதை தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.