அழுது கொண்டே இருந்த குழந்தை : துப்பட்டாவால் முகத்தை மூடி கொன்ற தாய் !

 

அழுது கொண்டே இருந்த குழந்தை : துப்பட்டாவால் முகத்தை மூடி கொன்ற தாய் !

பவித்ராவின் கணவர் அவரை பிரிந்து சென்று விட்டதால், இவர் தன் குழந்தையுடன் வேலை பார்த்துக் கொண்டு தனியே வசித்து வருகிறார்.

வேலூர் அருகே வாலாஜாபேட்டை அடுத்த திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பவித்ராவிற்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர்  மௌனிகா. பவித்ராவின் கணவர் அவரை பிரிந்து சென்று விட்டதால், இவர் தன் குழந்தையுடன் வேலை பார்த்துக் கொண்டு தனியே வசித்து வருகிறார்.

hospital

பவித்ரா ஒரு நாள் நேற்று மௌனிகாவை மயக்கமடைந்து விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மௌனிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதை அறிந்ததால், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

bby

குழந்தை உடலின் பிரேத பரிசோதன அறிக்கையில், மௌனிகா மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பவித்ராவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் பவித்ரா, கணவனைப் பிரிந்து தனியே வேலை பார்த்து வாழ்ந்து வருகிறேன். வேலை முடித்து வீடு திரும்பிய போது, மௌனிகா அழுது கொண்டே இருந்ததால் துப்பட்டாவை வைத்து அவள் வாயை மூடியதால் குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, பவித்ராவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.