அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி!

 

அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி!

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே அழகுநிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பலை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். 

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே அழகுநிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பலை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். 

சென்னை உள்ளிட்ட பல இடங்களில்  பார்லர் என்ற பெயரில் விபச்சாரத் தொழில் மறைமுகமாக நடந்துவருவது அவ்வப்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இதில் பெரும்பாலும் வட இந்திய பெண்களே அதிகமாக ஈடுபடுத்தப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தொழில் ஆன்லைன் மூலமாகவே அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே அழகுநிலையம் என்ற விபச்சார விடுதி செயல்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழில் நடத்திய கும்பலை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி சங்கர் கணேஷ் என்பவர்தான் விபச்சார விடுதிக்கு சொந்தக்காரர் என்றும் அவர்தான் பாலியல் தொழில் நடத்தி வருவதும் தெரிய வந்தது.

 இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சங்கர் கணேசையும் கைது செய்தனர்.