அழகு நிலையத்தில் அழகிகள் ஆபாசமா ? -அதிரடி ரைடில் 6 லட்சம் கேட்டனர்  -போலீஸ் தொல்லையால் புலம்பும் பியூட்டி பார்லர் பெண்

 

அழகு நிலையத்தில் அழகிகள் ஆபாசமா ? -அதிரடி ரைடில் 6 லட்சம் கேட்டனர்  -போலீஸ் தொல்லையால் புலம்பும் பியூட்டி பார்லர் பெண்

பெங்களூரு கஸ்தூரிபா நகரில் அழகு நிலையம் நடத்திவரும் சண்டா என்ற 31 வயது பெண் ,ராமமூர்த்தி நகர் போலீசார் வேண்டுமென்றே தனது அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக ரைட் நடத்தி தனது நிலையத்தை மூட வைத்து வழக்கிலிருந்து விடுவிக்க 6 லட்சம் கேட்டு 1 லட்சத்தை பறித்து சென்றதாக புகார் கூறியுள்ளார்

பெங்களூரு கஸ்தூரிபா நகரில் அழகு நிலையம் நடத்திவரும் சண்டா என்ற 31 வயது பெண் ,ராமமூர்த்தி நகர் போலீசார் வேண்டுமென்றே தனது அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக ரைட் நடத்தி தனது நிலையத்தை மூட வைத்து வழக்கிலிருந்து விடுவிக்க 6 லட்சம் கேட்டு 1 லட்சத்தை பறித்து சென்றதாக புகார் கூறியுள்ளார் .

spa

சண்டா கூறுகையில் ,”நான் 7 வருடமாக சூர்யாபெங்களூரு நகர் 2nd மெயின் ரோட்டில் அழகுநிலையம் நடத்தி வருகிறேன் .கடந்த வியாழக்கிழமை நான் வெளியே சென்றிருந்த சமயம் மப்டி உடையில் இருந்த சில போலீசார் எனது அழகு நிலையத்துக்குள் திடுதிப்பென புகுந்து இங்கு விபச்சாரம் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது என கூறி எனது கடை ஊழியர் பூஜா உள்பட நாலு பேரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர் ,மேலும் எனது நிலையத்தை பூட்டி சாவியையும் கொண்டு சென்றனர் .

arrest

நான் தகவல் கேள்விப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது அங்கு இருந்தவர்கள் கடையை திறக்கவும் தொழிலாளர்களை விடுவிக்கவும் 6 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு 1 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டனர் என்றார் .மேலும் தனது நிலையத்தில் அதுபோல விபச்சாரம் எதுவும் நடக்கவில்லையெனவும் யாரோ வேண்டாதவர்கள் செய்த சதி இது என கூறினார் .
இது பற்றி மேலதிகாரிகளிடம் கேட்டபோது இந்த ரைட் சில கீழ்மட்ட போலீசாரால் நடத்தப்பட்டது எனவும் இதுபற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்