அர்ஜூனா விருது: தமிழக துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெயர் பரிந்துரை

 

அர்ஜூனா விருது: தமிழக துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெயர் பரிந்துரை

அர்ஜூனா விருதுக்கு தமிழக துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: அர்ஜூனா விருதுக்கு தமிழக துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு துப்பாக்கி சுடும் பிரிவில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மனு பேக்கர் ஆகியோருடன் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையான இளவேனில் வாலறிவன் பெயரையும் தேசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

ttn

அந்த சம்மேளனத்தின் செயலாளர் ராஜீவ் பாட்டியா இதை உறுதிப்படுத்தினார்.வேட்புமனுக்கள் விரைவில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்” என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். அதனால் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றார். இவர் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.